மாற்றுத் திறனாலிகள்...

E-mail Print PDF

வானில் பறக்கும்
பறவை போல்
இருந்து விட்டால்
பறந்து விடலாம்....!

பூமியில் விழுயும்
மழையை போல்
இருந்து விட்டால்
எழுந்து விடலாம்....!

கடலில் வாழும்
மீனை போல்
இருந்து விட்டால்
மிதந்து விடலாம்....!

மண்ணில் மறையும்
விதையை போல்
இருந்து விட்டால்
புதைந்து விடலாம்....!

காற்றில் கரையும்
பனியை போல்
இருந்து விட்டால்
உறைந்து விடலாம்....!

ஆனால்...?

இவர்களுக்கு இதில்
எதுயுமில்லை
மனிதனாய் பிறந்தும்
சிறகில்லை

ஆனால்,
இவர்களுக்குள் தான்
எத்தனை, எத்தனை
திறமைகள்!
அத்தனையும்
கடவுள் தந்த
கடமைகள்!

மாற்றி அழைக்கலாம்
இவர்களை இனி
"மாற்றுத் திறனாலிகள்"
என்று

-இதயவன்,

Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com

Add comment

Security code
Refresh