சமீபத்தில் நடந்த நள்ளிரவு பார்ட்டி ஒன்றில் நடிகை ப்ரியாமணியிடம் இந்தி நடிகர் சச்சின் ஜோஷி அத்துமீறியதாக நேரில் பார்த்த நட்பு வட்டாரங்கள் தெரிவித்தன. சிசிஎல் என்கிற செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நட்சத்திர போட்டி நடந்து வருகிறது. சமீபத்தில் கொச்சியில் நடந்த போட்டியில் தமிழ், இந்தி, மலையாள நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். போட்டி முடிந்த பிறகு நள்ளிரவு பார்ட்டி ஆரம்பமானது. இந்த பார்ட்டியின் முடிவில் நடிகை ப்ரியாமணி அதிகாலை 4 மணிக்கு தன் அறைக்கு திரும்பும்போது, அங்கு போதையில் இருந்த இந்தி நடிகர் சச்சின் ஜோஷி என்பவர் ப்ரியாமணியின் கையை பிடித்து இழுத்து கட்டிப்பிடிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத ப்ரியாமணி அவரை தள்ளி விட்டு அங்கிருந்து வெளியேறினார். இதை பார்த்த ஸ்ரீசாந்த், சச்சின் ஜோஷியை சமாதானப்படுத்தி அழைத்து சென்றார். இதனால் பார்ட்டி நடந்த ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி ப்ரியாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் சச்சினை திட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து ப்ரியாமணி, "இப்படியொரு சம்பவம் எதுவும் நடக்கவும் இல்லை, அப்படி நடந்திருந்தால் நானே உங்களிடம் கூறியிருப்பேன்" என்று சொன்னார். 'பப்'ன்னாலே இப்டி 'கப்'பெல்லாம் கேட்டுத்தானே ஆகவேண்டியிருக்கு.......
| < Prev | Next > |
|---|


